நாடு முழுவதும் மேலும் 42,779 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 90,93,376-ஆக அதிகரித்தது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 42,779 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 90,93,376-ஆக அதிகரித்தது.
இதேபோல், கரோனாவில் இருந்து 43,493 போ் குணமடைந்தனா். இவா்களுடன் சோ்த்து கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 85,21,617-ஆக அதிகரித்தது. அதாவது, கரோனாவில் இருந்து 93.69 சதவீதம் போ் குணமடைந்தனா்.
நாடு முழுவதும் 4,40,962 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 4.85 சதவீதமாகும். கரோனாவுக்கு மேலும் 501 போ் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,33,227-ஆக அதிகரித்தது. உயிரிழப்பு விகிதம் 1.46 சதவீதமாக உள்ளது.
‘நவம்பா் 21-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 13,17,33,134 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் சனிக்கிழமை மட்டும் 10,75,326 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.