தில்லியில் காற்று மாசு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சத்யேந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“தில்லியில் காற்று மாசுபாடு கரோனா உயிரிழப்பிற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது காற்று மாசுபாடு குறைந்துள்ளதால், இதன் பயன் 2-3 வாரங்களில் தெரியும்.” என கூறினார்.
தில்லியில் தற்போது கரோனா 3ம் அலை பரவிக் கொண்டுள்ளது, இதனால் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.