புணேவில் 550 கிலோ வெங்காயம் திருடிய இரண்டு பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
புணே அருகே தேவ்ஜாலி கிராமத்தில் சஞ்சய் பராதி மற்றும் போபாட் காலே ஆகியோர் 550 கிலோ எடையுள்ள வெங்காயத்தை திருடியதற்காக கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐ.பி.எல்) 379, 511 மற்றும் 34 பிரிவுகளின் கீழ் புணேவின் நாராயங்கான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புணே பகுதிகளில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ. 100 என்பது குறிப்பிடத்தக்கது.