மும்பை மாநகராட்சியின் மேயர் கிஷோரி பெட்னேகருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து கிஷோரி பெட்னேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, கரோனா சோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், நோயின் அறிகுறி இல்லாததால் நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என கூறினார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் புதன்கிழமை புதிதாக 23,816 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.