கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி பிபிஇ உடை அணிந்து வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிமுதல் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனிடையே மாலை 6 மணிமுதல் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள திமுகவின் எம்.பி. கனிமொழி மருத்துவமனையிலிருந்து பிபிஇ உடை அணிந்து மயிலாப்பூர் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.