உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு உணவு வழங்க புதிய கட்டுப்பாடுகள் விதித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு சேவைகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், 2 மணிநேரத்திற்கு குறைவாக பயண நேரமுடைய உள்நாட்டு விமானங்களில் உணவு வழங்கப்படாது எனத் தெரிவித்துள்ளனர்.