கரோனா கட்டுப்பாட்டு அறையின் பணிகளை மேற்கொள்ள 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஆக்ஸிஜன், கரோனா மருந்துகள் போன்ற பணிகளை ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.
அனாமிகா ரமேஷ், கெளரவ் குமார், ஆர்.ஐஸ்வர்யா மற்றும் கட்டா ரவி தேஜா ஆகிய 4 அதிகாரிகளும் சுழற்சி முறையில் பணிகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.