

ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை காலை அரசு ஊழியர்கள் 4பேர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காபூல் பகுதியில் இன்று காலை 9.20 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த 4 பேரும் மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
காபூலில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ஐ.இ.டி. குண்டு வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.