பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தமிழக மீனவர்கள் உயிரிழப்பு: மத்திய அரசு கண்டனம்

இலங்கை கடற்படை தாக்குதலில் நான்கு தமிழக உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
மீனவர்களின் சடலங்களை மீட்கும் மீட்புப்படை.
Updated On :21 ஜனவரி 2021, 3:55 pm

DIN

இலங்கை கடற்படை தாக்குதலில் நான்கு தமிழக உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த 18.1.2021அன்று மீன் பிடிப்பதற்காக தங்கச்சிமடத்தைச் சேர்ந்த  ஆரோக்கியஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மெசியா, நாகராஜ், செந்தில்குமார் மற்றும் சாம்சன்டார்வின் ஆகிய 4 மீனவர்களும் மீன் பிடிக்கச் சென்றனர்.

இம்மீனவர்கள் 19.1.2021 அன்றே கரைக்கு திரும்பி இருக்கவேண்டும். அவர்கள் கரைக்குத் திரும்பாததால், இந்திய கடலோர காவல் படையின் ஒரு கப்பல், இந்திய கப்பல் படையைச் சேர்ந்த ஒரு கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்றது.

இதில் 4 மீனவர்களும் இலங்கை கடற்படையின் தாக்குதலினால் இறந்துவிட்டதாக மீனவர்கள் மூலம் தகவல் கிடைத்தது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில்,

இலங்கை கடற்படையின் கப்பல் மோதி 4 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்திய துணை தூதரகம் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்திடமும் மத்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் பிரச்னையை மனிதாபிமானத்துடன் இலங்கை கையாள வேண்டும்.  மீனவர் தொடர்பான உடன்படுக்கையை இரு நாடுகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.