

ராஜஸ்தான் மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஆளுநர் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல் அளித்துள்ளார்.
மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரை பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கூட்டுவதற்காக ஆளுநரிடம் மாநில அரசு ஒப்புதல் கேட்டிருந்தது.
இந்நிலையில், மாநில அரசின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.