ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று இரண்டாம் டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், ஏப்ரல் 30ஆம் தேதி முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், இன்று இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளார்.
மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றது.