ஆந்திரத்தில் தளர்வுகளுடன் ஜூன் 20 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
ஆந்திர மாநிலத்தில் தளர்வுகளுடன் ஜூன் 20ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.


ஆந்திர மாநிலத்தில் தளர்வுகளுடன் ஜூன் 20ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திரத்தில் கடந்த மே 5 முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜூன் 10ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டித்து சில தளர்வுகளை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...