உத்தரகண்டிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து

பல மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உத்தரகண்டிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தரகண்டிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து

பல மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உத்தரகண்டிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் ஏற்கனவே சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்வது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து முடிவெடுத்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து கரோனா பரவல் காரணமாக உத்தரகண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com