பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மகாராஷ்டிரத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால், மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பருவமழையின் போது செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தில்லியில் செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்தக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், பேரிடர் மேலாண் துறை இயக்குநர், வானிலை ஆய்வு மைய இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.