பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

‘திரிணமூலுக்கு பிரசாரம் செய்வதை சரத் பவார், தேஜஸ்வி தவிர்க்க வேண்டும்‘: காங்கிரஸ்

மேற்குவங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு பிரசாரம் செய்வதை சரத் பவார் மற்றும் தேஜஸ்வி யாதவ் தவிர்க்க வேண்டும் என மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

News image
காங்கிரஸ்
Updated On :17 மார்ச் 2021, 10:10 am

ANI

மேற்குவங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு பிரசாரம் செய்வதை சரத் பவார் மற்றும் தேஜஸ்வி யாதவ் தவிர்க்க வேண்டும் என மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், திரிணமூல், பாஜக, காங்கிரஸ் - இடதுசாரிகள் இடையே மும்முனை போட்டி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ், பிகாரில் ஆர்ஜேடியும் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளனர்.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா கடிதம் எழுதியுள்ளார்.

அதில், திரிணமூல் கட்சிக்காக நட்சித்திர பேச்சாளராக நீங்கள் பிரசாரம் செய்தால், அது மேற்குவங்க மக்களிடையே குழப்பத்தை உருவாக்கும் என்பதால் திரிணமூலுக்கு பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.