மேற்குவங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு பிரசாரம் செய்வதை சரத் பவார் மற்றும் தேஜஸ்வி யாதவ் தவிர்க்க வேண்டும் என மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், திரிணமூல், பாஜக, காங்கிரஸ் - இடதுசாரிகள் இடையே மும்முனை போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ், பிகாரில் ஆர்ஜேடியும் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளனர்.
இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், திரிணமூல் கட்சிக்காக நட்சித்திர பேச்சாளராக நீங்கள் பிரசாரம் செய்தால், அது மேற்குவங்க மக்களிடையே குழப்பத்தை உருவாக்கும் என்பதால் திரிணமூலுக்கு பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


