இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

மகாராஷ்டிரம்: அதிகரிக்கும் கரோனா பரவலின் மத்தியில் பொதுத் தேர்வு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரத்தில் பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

News image

மகாராஷ்டிரம்: அதிகரிக்கும் கரோனா பரவலின் மத்தியில் பொதுத் தேர்வு

Updated On :18 மார்ச் 2021, 10:13 am

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரத்தில் பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலை ஏற்பட்டிருக்கும் சூழலில், முன்பு அறிவித்தபடி, ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு நடக்கவுள்ளது.

கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 23 முதல் மே 29 வரையிலும், 10 ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 29 முதல் மே 31 வரையிலும் நடைபெறும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், கரோனா இரண்டாம் அலை ஏற்பட்டதால் தேர்வு தேதிகள் மாற்றப்படும் என எதிர்பார்த்த சூழலில், அதே தேதிகளில் கரோனா நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடைபெறும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் மற்றும் தேர்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் இரண்டு நாள்களில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.