இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு தடுப்பூசி: விவசாய சங்கத் தலைவர் வலியுறுத்தல்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமென விவசாய சங்கத் தலைவர் தலைவர் ராகேஷ் திக்காயத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

News image

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு தடுப்பூசி: விவசாய சங்கத் தலைவர் வலியுறுத்தல்

Updated On :18 மார்ச் 2021, 9:41 am

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமென விவசாய சங்கத் தலைவர் தலைவர் ராகேஷ் திக்காயத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் கடந்த நவம்பர் 26 முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாய பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகளில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதனால், விவசாயிகளின் போராட்டம் நவம்பர் தொடங்கி தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், நாட்டில் கரோனாவின் இரண்டாம் அலை ஏற்பட்டிருக்கும் சூழலில், தில்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என காசிப்பூர் எல்லையில் போராடிவரும் விவசாய சங்கத் தலைவர் தலைவர் ராகேஷ் திக்காயத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.