கரோனாவிலிருந்து மீண்ட மத்திய முன்னாள் அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் வீடு திரும்பினார்.
மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கடந்த மே 5ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவு, சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்பட்டு, அவரது உடல்நிலை நல்ல முறையில் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அவர் கரோனாவிலிருந்து மீண்டதையடுத்து இன்று பிற்பகல் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.