இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ம.பி.: பத்திரிகையாளர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்கும்

மத்திய பிரதேசத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களின் சிகிச்சை செலவை மாநில அரசே ஏற்கும் என முதல்வர் சிவராஜ் செளகான் தெரிவித்துள்ளார்.

News image

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான்

Updated On :14 மே 2021, 9:12 am

DIN

மத்திய பிரதேசத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களின் சிகிச்சை செலவை மாநில அரசே ஏற்கும் என முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 தொடக்கத்தில் கரோனா பரவத் தொடங்கிய காலத்திலிருந்து பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தங்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கரோனா ஊரடங்கு காலத்திலும் அவர்களது பணி இடைவிடாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. 

இந்நிலையில் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டால், சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என முதல்வர் சிவராஜ் செளகான் இன்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பத்திரிகையாளர்களும் கரோனா முன்களப்பணியாளர்கள் தான் என மபி முதல்வர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.