கரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக 27 தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(மே 19) ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்து தொடர்பாக தொண்டு முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், 27 தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், முக்கிய அமைச்சர்கள், துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.