
புதுச்சேரியில் அனைத்து வகையான மதுக்கடைகளையும் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மே 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருக்கின்றது.
இந்நிலையில் இன்று புதுவை அரசு வெளியிட்ட அறிவிப்பில்,
புதுச்சேரியில் உள்ள அனைத்து வகையான உரிமைகளும் கொண்ட மதுக்கடைகள் மே 31ஆம் தேதி வரை மூட வேண்டும். தடையை மீறி கடைகளை திறந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.