ஆந்திரத்தில் புதிதாக 2,558 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,15,832 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 14,913 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 915 பேர் குணமடைந்ததைத் தொடர்ந்து கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிகை 8,93,651 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்று பாதிப்பு காரணமாக 6 பேர் பலியாகி உள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 7,268 பேர் பலியாகியுள்ளனர்.