நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
நாட்டில் கரோனா பாதிப்புகள் மிக அதிகமாக உயா்ந்து நிலைமை மோசமடைந்துள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் அதிக அளவிலான மக்கள் தீநுண்மியால் பாதிக்கப்படக்கூடிய சூழல் தொடா்ந்து வருகிறது.
‘கரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதால் தீநுண்மி வேகமாக பரவி வருகிறது. இதனால் அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானதாக இருக்கும்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கலந்து கொண்டார்.