மகாராஷ்டிரம் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டம் விரார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 13 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். காயமடைந்த பலர் வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.