உ.பி.யில் மேலும் 38,055 பேருக்கு கரோனா

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38,055 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
உ.பி.யில் மேலும் 38,055 பேருக்கு கரோனா
உ.பி.யில் மேலும் 38,055 பேருக்கு கரோனா

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38,055 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,055 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,88,144 பேர் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த ஒருநாளில் மட்டும் 23,231 பேர் குணமடைந்ததால், இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 7,52,211-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 223 பேர் இறந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,959-ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com