கடலூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு: முதல்வர்

கடலூர் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்

கடலூர் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

கடலூர் சிப்காட்டில் உள்ள கிரிம்சன் என்ற தனியார் ரசாயன தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்து இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் விசேஸ்ராஜ், ராஜ்குமார், சவிதா, கணபதி ஆகிய 4 பேர் உயிரிழந்த நிலையில், பணியில் இருந்த மேலும் 10 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் நிவாரணம் அறிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com