மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சுபோத் குமாா் ஜய்ஸ்வால் சிபிஐ புதிய இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
1985-ஆம் ஆண்டு மகாராஷ்டிர பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ஜய்ஸ்வால் தற்போது சிஐஎஸ்எஃப் இயக்குநராக பணிபுரிந்து வருகிறாா்.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் 3 போ் கொண்ட தோ்வுக் குழு இவரை செவ்வாய்க்கிழமை நியமனம் செய்தது.
சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ஜய்ஸ்வால் 2 ஆண்டுகள் அப்பதவி வகிப்பாா் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.