சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: இளம்பெண் பலி

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கி இளம்பெண் ஒருவர் பலியானார். 
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: இளம்பெண் பலி
Published on
Updated on
1 min read

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கி இளம்பெண் ஒருவர் பலியானார். 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த கேசவன்(50) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை மார்க்நாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று சுமார் 90 அறைகளில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை வழக்கம் போல் இந்த பட்டாசு தொழிற்சாலையில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. 

இதில் மதியத்திற்கு மேல் ஆலையில் உள்ள மூலப்பொருட்கள் வைத்திருக்கும் ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து இந்த தொழிற்சாலையில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் வெடித்துச் சிதறின. இந்த தீ விபத்தில் அந்த அறையில் இருந்த தொழிற்சாலையின் மார்க்நாதபுரத்தைச் சேர்ந்த கணக்காளராக பணியாற்றி வரும் ஜெயசித்ரா(24) என்ற பெண் தீ விபத்தில் சிக்கி உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் பட்டாசு தொழிற்சாலை பணியாளர்களின் 12-இருசக்கர வாகனங்களும் தீயில் கருகின. இந்த பட்டாசு ஆலை தீ விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com