குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் குறித்த ஆய்வு தொடக்கம்

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் குறித்த ஆய்வுப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2023, 6:17 pm IST

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் குறித்த ஆய்வுப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைய வாய்ந்த சட்டைநாதர் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், யாகசாலை மண்டபம் அமைப்பதற்கான பணிகள் நேற்று  துவங்கியது.  

இதற்காக கோயில் மேற்கு கோபுர வாயில் அருகே நந்தவனத்தின் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோன்டியபோது மண்ணில்  புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சோமஸ்கந்தர், அம்பாள், பூர்ண புஷ்கலா அய்யனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 22 ஐம்பொன் சிலைகளும், 55 பீடங்கள், பூஜை பொருட்கள் மற்றும் சீர்காழியில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பதிகம் தாங்கிய தேவார செப்பேடு 462 ஆம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. 

அதனை தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரம்மாசாரியர் நேரில் பார்வையிட்டார். மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி பார்வையிட்டு சென்றார். 

Story image

இதனை அடுத்து சட்டைநாதர் கோயில் வளாகத்தில் மீட்கப்பட்ட சிலைகள் அணைத்தும் கோயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திலேயே வைக்கப்பட்டது.  

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு நூலாக்க திட்ட குழுவை சேர்ந்த முனைவர் தாமரை பாண்டியன் அறிவுறுத்தலின் படி, ஆய்வாளர்கள் சண்முகம், சந்தியா, சுவடி திரட்டுனர் விஸ்வநாதன், சுவடி பராமரிப்பாளர் பிரகாஷ் குமார் உள்ளிட்ட  6 பேர்  கொண்ட குழுவினர் சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு வருகை புரிந்து கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை, பாதுகாப்பு பெட்டக சீல் தாசில்தார் செந்தில்குமார் முன்னிலையில் அகற்றப்பட்டு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் செப்பேடுகள் வெளியில் எடுத்து அடுக்கி வைக்கப்பட்டது. 

பின்னர்  குழுவினர் செப்பேடுகளை ஆய்வு செய்ய தொடங்கினர். ஆய்வின் மூலம் இந்த செப்பேடுகள் எந்த காலத்துடன் தொடர்புடையது, இவற்றில் உள்ள தகவல்கள் என்னென்ன என்பது குறித்து முழுவதும் தெரியவரும் என்றும், இதுவரை தமிழ்நாட்டில் ஓலை சுவடியில் மட்டுமே பதிகங்கள் எழுதப்பட்டுள்ளதாகவும் முதன்முறையாக அதிக அளவு திருப்பதிகம் செப்பேடுகளில் எழுதப்பட்டு, தற்போது இங்கு சீர்காழியில் தான் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.