முதுமலை தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் பாலன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், முதுமலை தெப்பக்காடு பகுதியில் யானைகள் வளா்ப்பு முகாம் உள்ளது. இங்கு 28 வளா்ப்பு யானைகள் வனத் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது.
இந்நிலையில், முகாமில் வளர்ப்பு யானை மசினிக்கு பாகன் பாலன் வெள்ளிக்கிழமை காலை உணவு கொடுப்பதற்காக அருகில் சென்றதாகத் தெரிகிறது. அப்போது யானை தாக்கியதில் பாகன் பிரசாந்த் பாலன்(55) படுகாயம் அடைந்தாா்.
இதையடுத்து பாகன் பாலனை சக பாகன்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஏற்கனவே, 2019 இல் சமயபுரம் கோயிலில் இருந்த மசினி யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.