
இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆளுநர் உரையில் உள்ள அம்சங்கள் குறித்து ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டிருந்தால் தந்திருப்போம். உரை மனசாட்சிக்கு விரோதமாக இருக்கிறது என்றால் முதலிலேயே ஆளுநர் சொல்லி இருக்க வேண்டும். ஆளுநர் மரபுகளை மீறியபோதும் ஜனநாயகப்படி செயல்பட வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். 2 நிமிடம் காத்திருந்து தேசிய கீதம் பாடிய பிறகு ஆளுநர் சென்றிருக்கலாம்.
மத்திய அரசுக்கு எதிரான மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம் குறிவைத்து அவமரியாதை செய்கின்றனர். ஆளுநர் ரிமோட் மூலம் இயக்கப்படுகிறார். ஜனநாயக முறைப்படி ஆளுநரை அழைத்து தமிழ்நாடு சட்டப்பேரவையை முதல்வர் கூட்டினார். தமிழ்நாடு ஆளுநர் ரவி உரையை வாசிக்காமல் சொந்த கருத்துகளை பேசிவிட்டு சென்றுள்ளார்.தென் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் மக்கள் நலனுக்கு எதிராக உள்ளது. தென் மாநில ஆளுநர்களின் நிலைப்பாடு ஆளும் மாநில அரசுகளுக்கு எதிராகவே உள்ளது.
தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதை புள்ளி விவரங்களோடு சுட்டிக்காட்டியும் அதை ஏற்கும் மனப்பக்குவம் ஆளுநருக்கு இல்லை என்றார். நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் இன்று (பிப்.12) காலை 10 மணியளவில் தொடங்கியது. எனினும், ஆளுநர் தனது உரையை முழுவதுமாக படிக்காமல் 2 நிமிடங்களில் முடித்தார். சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும் ஆரம்பத்தில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்தார். “தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டுள்ளது.
அரசின் உரையில் உள்ள பல பகுதிகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது“ என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரத் என்று தனது உரையை ஆளுநர் முடித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு ஆளுநருக்கு தயாரித்த கொடுத்த கொள்கை உரையை, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தமிழில் முழுவதுமாக வாசித்தார். இதையடுத்து, தமிழக ஆளுநர் வாசிக்காத உரையை சட்டப்பேரவைக் குறிப்பில் முழுவதுமாக பதிவிட அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தை தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவைல் கூட்டம் நிறைவடைவதற்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.