கவிஞர் வைரமுத்து பக்ரீத் வாழ்த்து!

கவிஞர் வைரமுத்து இஸ்லாமிய பெருமக்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து பக்ரீத் வாழ்த்து!
Updated on
1 min read

முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகை இன்று (ஜூன் 17) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குடும்பம் நிறுவனம் அரசு என்ற எந்த அமைப்பும் யாரோ ஒருவரின் தியாகத்தை முன்வைத்தே கட்டமைக்கப்படுகிறது. அந்தத் தியாகத்தைக் கொண்டாட்டக் குறியீடாகக் கொள்ளும் பக்ரீத் சக மனிதனை நேசிக்கச் சொல்கிறது. அண்டை வீட்டாருக்கும் ஏழைகளுக்கும் ஈகைப் பண்பாட்டை போதிக்கிறது. குறிக்கோள் மிக்க இந்தக் கொண்டாட்டத்தை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். தருவோர்.. பெறுவோர்.. இருவரும் வாழ்க..!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com