விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் துண்டிக்கப்பட்டது: தைரியமாக இருங்கள் என விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல்

இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தால் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரித்துவிடப்பட்ட லேண்டர் பகுதி நிலவின் பரப்பில் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் தரையிறங
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள சந்திரயான்2
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள சந்திரயான்2
Updated on
1 min read

கண்ணுக்கு எட்டும் தூரத்தில் உள்ள நிலவில் தடம் பதிக்கும் வரலாற்றுச் சாதனையைப் படைத்த நாடுகள் வரிசையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து நம் இந்திய நாடும் தனது முதல் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் மூலம் நிலவை நோக்கி ஜூலை 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’, நிலவின் தென்பகுதியில் சனிக்கிழமை (7.9.2019) அதிகாலை 1.30 மணியளவில் தரையிறங்க உள்ளது. பெங்களூருவில் உள்ள சதீஷ் தவான் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இச்சாதனை முயற்சியை விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com