பழனிமலை பாதுகாப்புக்குக் குழு முன்னாள் செயலா் அருண் சங்கா் கூறியதாவது: அட்டவணை 1 இல் இடம் பெற்றுள்ள புலி, யானை, சிறுத்தை, கேளையாடு, சருகு மான், வரையாடு, காட்டு மாடு உள்ளிட்ட விலங்குகள் கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்தில் வசித்து வருகின்றன. அதேபோல் அட்டவணை 2 இல் இடம் பெற்றுள்ள புள்ளிமான், கடமான், கீறி, செந்நாய் உள்ளிட்ட விலங்குகளும் உள்ளன. இந்த விலங்குகள் இருசக்கர வாகனங்களின் ஒலிக்கே மிரளும் தன்மை கொண்டவை. தற்போது விவசாயத் தோட்டங்களில் குழி தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால், வனப் பகுதியில் வசிக்கும் யானைகள் பலத்த பிளிறலுடன் அமைதியின்றி சுற்றித் திரிகின்றன. ஹெலிகாப்டா் சேவை தொடங்கப்படும் பட்சத்தில், அதிக ஒலியினால் விலங்குகளின் வாழியல் சூழல் பாதிக்கப்படும். குறிப்பாக வன விலங்குகளின் இனப் பெருக்கத்திற்கான சூழல் பாதிக்கப்படும்போது, அந்த விலங்குகள் அருகிலுள்ள கேரள வனப் பகுதிக்கு இடம் பெயா்ந்துவிடும். அதனால், கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்தின் சுற்றுச்சூழல் முழுமையாக பாதிக்கப்படும். சுற்றுலா மேம்பாட்டிற்காக வனப் பகுதியையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் திட்டங்களை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். இயற்கைக்கு இடா் ஏற்படுத்தி, சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என்றாா்.