புதுப்புது மோசடிகள் நடந்துகொண்டேதான் இருக்கிறது. மறுபக்கம் ஆதார் தகவல்கள் கசிகின்றன என்ற தகவல்களும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
அண்மையில், ஆதார் தகவல் மற்றும் வங்கிப் பெயர் மட்டும் வைத்துக்கொண்டு மோசடி நடப்பதாகவும், அந்த மோசடிக்கு ஓடிபி எதுவும் தேவையில்லை என்றும் சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கு, ஆதார் எண்ணுக்கு உரியவர்களின் கைரேகை மட்டும் திருடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாம் எங்கெல்லாம் கைரேகையை பதிவு செய்கிறோமோ அங்கிருந்து ஆதார் எண் மற்றும் கைரேகையை சட்டவிரோதமாகத் திருடும் கும்பல், நமது வங்கிக் கணக்கிலிருந்து எளிதாக பணத்தைத் திருட முடியும் என்றும் எனவே ஆதார் பயனாளர்கள், தங்களது பயே-மெட்ரிக் தகவல்களை லாக் செய்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதார் பயோ-மெட்ரிக் தகவல்களை லாக் செய்வது எப்படி?
ஒவ்வொருவரும் நமது ஆதார் பயோ-மெட்ரிக் தகவல்களை பாதுகாப்பாக லாக் செய்து வைத்துக் கொள்ள முடியும். எப்போது நமக்கு பயோ-மெட்ரிக் தகவல் தேவைப்படுமோ அப்போது மட்டும் இந்த லாக்கை ரிலீஸ் செய்து கொள்ளலாம்.
லாக் செய்யும் முறை
- யுஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்லவும். அல்லது எம்ஆதார் செயலியைப் பயன்படுத்தலாம்.
- உங்கள் ஆதார் எண்ணுக்குள் நுழையுங்கள்.
- அதில் மெனு என்பதை கிளிக் செய்யவும்.
- அதில், பயோ மெட்ரிக் செட்டிங்க்ஸ் செல்லவும்.
- எனாபிள் பயோமெட்ரிக் லாக் சேவைக்கு அருகில் உள்ள பெட்டிக்குள் டிக் மார்க் வைக்கவும்.
- பிறகு ஒகே என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் செல்லிடபேசிக்கு ஓடிபி வரும்.
- அந்த ஓடிபி எண்ணை உள்ளீடு செய்ததும், உங்களது பயோ மெட்ரிக் தகவல்கள் லாக் செய்யப்பட்டுவிடும்.
ஒருவேளை, உங்களுக்கு ஏதேனும் பரிவர்த்தனைகள் தேவைப்பட்டால் அப்போதுமட்டும் இதனை அன்லாக் செய்துவிட்டு, பிறகு வேலை முடிந்ததும் லாக் செய்துகொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான் சோர்வாக இருக்கக் காரணம் இதுதான்: விஷ்ணு விஷால்

பராமரிப்புப் பணி: கோவை - சென்னை ரயில்கள் பகுதியாக ரத்து
வாடகைக்கு விடப்பட்ட பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள்!

மத்திய பிரதேச கல்வி சமூக அலுவலகத்தில் சோதனை: நகை, ரொக்கம் பறிமுதல்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



