ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? என்று அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

News image

Center-Center-Kochi

Updated On :19 மார்ச் 2024, 2:53 pm IST

சென்னை: பெங்களூரு மாநகரமே தண்ணீர் பஞ்சம் பற்றி பஞ்சப்பாட்டு பாடிவரும் நிலையில், அந்த பரிதாப நிலை தமிழகத்துக்கும் ஏற்படுமோ என்ற அச்சத்தில் கலங்கியிருக்கிறார்கள் மக்கள்.

கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில், தமிழகம் வரலாறு காணாத மழையை சந்தித்திருந்த நிலையில், இந்த கோடையில் தமிழகத்துக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என்றுதான் பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால், நினைத்தது ஒன்று, நடந்தது வேறொன்று என்பது போல, இப்போதே, தமிழகத்தின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் தண்ணீர் குறைந்துவருகிறது.

கடந்த ஆண்டு இந்த காலக்கட்டத்தில் இருந்ததைக்காட்டிலும் இந்த ஆண்டு, தமிழகத்தில் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் நீர்நிலைகளில் 50 சதவீதம் தண்ணீர் குறைந்துள்ளது.

மாநிலத்தின் ஒட்டுமொத்த தண்ணீர் சேமிப்புத் திறன் 224.297 டிஎம்சி. ஆனால், தற்போது தண்ணீர் இருப்பது 76.233 டிஎம்சி. இது மொத்த கொள்ளவில் 33.9 சதவீதம்தான். இதே நாளில் கடந்த ஆண்டு தமிழகத்தில் கிட்டத்தட்ட 135.087 டிஎம்சி தண்ணீர் அதாவது 60 சதவீதம் தண்ணீர் இருப்பில் இருந்துள்ளது.

ஒருவேளை, கடும் கோடையால், இந்த நீரும் வற்றினால், புறநகர்ப் பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம் என்றே அஞ்சப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 90 தடுப்பணைகளில் ஆறு வறண்டுபோயிருக்கிறது. 25 நீர்நிலைகளில் 20 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது. மற்ற 39 அணைகளில் 20 - 50 சதவீத தண்ணீர் உள்ளது.

இந்த கோடையில் தண்ணீர் பஞ்சம் வரவே வராது என்றும், இருக்கும் தண்ணீர் முழுக்க குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மூத்த அதிகாரி எக்ஸ்பிரஸ் குழுவிடம் கூறுகையில், “தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்தபோது, ​​மாநிலத்தின் முக்கிய நீர்நிலைகளில் பல சேமிப்பு கட்டமைப்புகள் சேதமடைந்தன. இதனால் மொத்த கொள்ளளவில், 50% க்கு மேல் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, அந்த மாவட்டங்களுக்கு, மாநில அரசு, 280 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. டெண்டர் முடிந்ததும், பணிகள் துவங்கலாம், என்றார்.

காவிரி டெல்டா பகுதியை குறிப்பிட்டு சொல்லும் மற்றொரு அதிகாரி, “மேட்டூர் அணையின் அதிகபட்ச கொள்ளளவு 93.47 டிஎம்சி அடி, கடந்த ஆண்டு (மார்ச் 18, 2023) 56.4 மிமீ மழை பெய்திருந்தது. அப்போது தண்ணீர் அளவு 69.21 டிஎம்சி அடியாக இருந்தது. தற்போது மழையின்றி 26.05 டிஎம்சி அடியாக உள்ளது. கோடை மாதங்களில் மழை பெய்யாவிட்டால், குடிநீர் வழங்குவது கடினமான பணியாக இருக்கும் என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.