திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு: திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

முதியோர், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்களிக்கலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

News image

கீழமை நீதிமன்றங்களை ஜன. 18 முதல் முழு அளவில் செயல்பட அனுமதிக்க தீர்மானம்

Updated On :23 டிசம்பர் 2020, 4:21 am


சென்னை: முதியோர், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்களிக்கலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்து மனு மீதான விசாரணை புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. 

வரும் 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கும் மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்கு அளிக்கலாம் என்ற முறையை அமல்படுத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. 

இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள திமுக, அந்த மனுவில், தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய நடைமுறையால் தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. முதியவர்களுக்கு தனி வாக்குச்சாவடிகளை அமைக்கலாம் என தெரிவித்திருந்தது. 

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.