ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க நிறுவனர், திருமுருகன் காந்தி, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு உள்ளிட்ட 18 பேர் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
தூத்துக்குடியைடுத்த குமரெட்டியபுரம் கிராமத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தொடர்ந்து 100 நாள்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை தொடர்ந்து 2018 மார்ச் 3 இல், மே17 இயக்க நிறுவனர் திருமுருகன் காந்தி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு ஆகியோர் கிராம மக்களை சந்திக்க சென்றார்களாம்.
இதையடுத்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய காவலர்கள் எவ்வித முன் அனுமதி இன்றி தடையை மீறி சென்றதாக 2018 மார்ச் 4 ஆம் தேதி திருமுருகன் காந்தி,பாத்திமா பாபு உள்பட 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை 2019 ஜுலை 16 இல் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றம் எண் 1 இல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை வழக்கு விசாரணைக்காக திருமுருகன் காந்தி, பாத்திமா பாபு உள்பட 18 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.