எனவே, மத்திய அரசானது ஆகஸ்ட்1-ஆம் தேதி முதல் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன். உலகில் உள்ள பல நாடுகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் கூட, படிப்படியாக இப்போது சுற்றுலா பயணிகளை வரவேற்க காத்து கொண்டிருக்கின்றன.
அந்த நாடுகளுக்கு இப்போது சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். கரோனா தொற்றை காரணம் காட்டி, சுற்றுலாவின் வளர்ச்சியை நாம் தடுத்து நிறுத்த முடியாது. சுற்றுலா பயணிகள் மட்டுமல்ல வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்கு வரும்போது வியாபாரம் பெருகும், அரசுக்கு வருவாய் பெருகும், உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.