காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுக்கோட்டை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 71% நிறைவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரிப் பாசனப் பகுதிகளில் தொடங்கப்பட்ட கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் 71 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன.

News image
Updated On :8 ஜூன் 2020, 6:12 am

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரிப் பாசனப் பகுதிகளில் தொடங்கப்பட்ட கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் 71 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலரான உயர்கல்வித் துறைச் செயலர் அபூர்வா தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி பகுதிகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

காவிரிப் பாசனப் பரப்பான 27 ஆயிரம் ஏக்கரும் மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படும்போது பயன்பெறும் அளவுக்கு இப்பணிகளுக்காக கூடுதல் எந்திரங்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அபூர்வா தெரிவித்தார்.

ரூ. 1.74 கோடியில் 94 கி.மீ. தொலைவுக்கு கால்வாய்கள் தூர்வாரத் திட்டமிடப்பட்டு தற்போது வரை 64 கிமீ தொலைவு தூர்வாரி முடிக்கப்பட்டுள்ளது.

கால்வாய்கள் தூர்வாரும் பணியை ஆய்வு செய்யும்  பணியில் காமிரா பொருத்தப்பட்ட ஆளில்லா சிறியரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.