சீர்காழியில் விவசாய குழுக்களுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள்

சீர்காழி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கூட்டு பண்ணையத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர், வேளாண் கருவிகளை எம்.எல்.ஏ. பிவி.பாரதி இன்று (புதன்கிழமை) வழங்கினார்.
வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீர்காழி எம்.எல்.ஏ பிவி.பாரதி , விவசாயிகள் குழுக்களுக்கு மானிய விலையில் உழவு எந்திரங்கள் வழங்கினார்.
வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீர்காழி எம்.எல்.ஏ பிவி.பாரதி , விவசாயிகள் குழுக்களுக்கு மானிய விலையில் உழவு எந்திரங்கள் வழங்கினார்.
Updated on
1 min read

சீர்காழி: சீர்காழி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கூட்டு பண்ணையத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர், வேளாண் கருவிகளை எம்.எல்.ஏ. பிவி.பாரதி இன்று (புதன்கிழமை) வழங்கினார்.

சீர்காழி வேளாண் உதவி இயக்குனர்(பொ) சி. சின்னண்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை மூலம் சீர்காழி வட்டாரத்தில் கூட்டு பண்ணையத் திட்டத்தில் விளந்திட சமுத்திரம், நிம்மேலி, திருவாலி, கீழசட்டநாதபுரம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ஐந்து லட்சம் வீதம் நான்கு குழுக்களுக்கும் இருபது லட்சம் மானியத்தில் டிராக்டர்களும், 50 சதவீதம் மானியத்தில் ஆயில் என்ஜின்களும், நுண்ணீர் பாசன திட்டத்தில் 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன கருவிகளும், தென்னங்கன்றுகளும் விவசாயிகளுக்கு சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி பங்கேற்று வழங்கினார்.

விழாவில் விவசாயிகள் குழுக்களை சேர்ந்த திருமாறன், அப்துல்சத்தார், ராஜ்மோகன், ராஜதுரை அதிமுக நகர செயலாளர் பக்கிரிசாமி, பேரவை செயலாளர் மணி, வழக்குரைஞர்கள் மணிவண்ணன், நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com