புதுடெல்: கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் ஆர் கிபோச்சி நவம்பர் 2 முதல் 6 வரை ஐந்து நாள்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளதாக இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இந்திய இராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் கூறுகையில், "இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், ஆப்பிரிக்காவுக்கு வெளியே வருகை தரும் முதல் நாடு இந்தியா ஆகும்.
அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.