தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அதிகரிக்கும் மரணங்கள்: பிரிட்டனில் ஒரே இடத்தில் உடல்கள் புதைப்பு

கரோனா தொற்றால் தொடர்ந்து அதிகளவில் உயிரிழப்புகள் நேர்ந்து வரும் நிலையில் லண்டனில் ஒரே இடத்தில் அதிகளவிலான பெரியளவில் புதைகுழிகள் தோண்டி சடலங்களைப் புதைக்கின்றனர்.

News image
Updated On :14 ஏப்ரல் 2020, 1:44 pm

கரோனா தொற்றால் தொடர்ந்து அதிகளவில் உயிரிழப்புகள் நேர்ந்து வரும் நிலையில் லண்டனில் ஒரே இடத்தில் அதிகளவிலான பெரியளவில் புதைகுழிகள் தோண்டி சடலங்களைப் புதைக்கின்றனர்.

தென் கிழக்கு லண்டனில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கப் பெருங்குழிகள் தோண்டப்பட்டிருக்கின்றன.

சிசில்ஹர்ஸ்ட் பகுதியிலுள்ள கெம்னல் பூங்கா கல்லறையில் பத்து கஜ நீளமும் இரண்டடி அகலமும் கொண்ட குழிகள் தோண்டப்பட்டு உடல்கள் வரிசையாகப் புதைக்கப்படுகின்றன. 

Story image

                        Image Credit- Pierre Alozie / eyevine

புதைப்பதற்காக 50-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் காத்திருப்பதாக இறுதிச் சடங்கு  ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கேற்பவே உடல்கள் புதைக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதனிடையே, கிழக்கு லண்டனில் தற்காலிக பிணவறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன (மேற்கத்திய நாடுகளில் இறந்தவர்களின் உடல்கள் சில நாள்கள் அல்லது சில வாரங்கள் கழித்துகூட புதைக்கப்படுவதுண்டு). வைரஸ் காரணமாக இறந்தவர்களின் உறவினர்கள்கூட வர இயலாத நிலை இருக்கிறது.

தற்காலிகப் பிணவறைகள் அமைப்பதிலும் இறந்தவர்களின் உடல்களைக் கையாள்வதிலும் ராணுவ வீரர்களும் பயன்படுத்தப்படுகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.