தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 68 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், நிஜாமுதீன் மையத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தில்லி மாநில நல்வாழ்வுத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இருவர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவித்த ஜெயின், தொற்று பாதித்துள்ள 1,578 பேரில் 1,080 பேர் (68.4 சதவிகிதம்) மாநாடு தொடர்புடையவர்கள் என்றார்.
பாதிக்கப்பட்ட 1,578 பேரில் 867 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் 32 நோயாளிகள் செயற்கை சுவாச சாதன உதவியுடனும் இருக்கின்றனர். இறந்தவர்கள் 32 பேர் .
மேலும் 20-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆயுள் பலம் அதிகரிக்க...

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போது?

சுவாமி மலையில் சித்திரைத் திருவிழா! கொடியேற்றத்துடன் துவக்கம்!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியீட்டுத் தேதி இதுவா?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


