புதுதில்லி: ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கிழக்கு ராஜஸ்தான், மேற்கு உத்தரப்பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 48 மணிநேரத்தில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஆகஸ்ட் 3 முதல் 5-ஆம் தேதி வரை மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த கொங்கன் மற்றும் கோவா பகுதியில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.