ஏனாதவாடி கிராமத்தில் ஐம்பெரும் விழா

செய்யாறு அருகே ஏனாதவாடி கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா முன்னிட்டு, 1330 மரக்கன்றுகள் நடுதல், கபசுரகுடிநீர் வழங்குதல், ஆர்சனிக் மாத்திரைகள் வழங்குதல் என ஐம்பெரும்
ஏனாதவாடி கிராமத்தில் ஐம்பெரும் விழா

செய்யாறு: செய்யாறு அருகே ஏனாதவாடி கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா முன்னிட்டு, 1330 மரக்கன்றுகள் நடுதல், கபசுரகுடிநீர் வழங்குதல், ஆர்சனிக் மாத்திரைகள் வழங்குதல் என ஐம்பெரும் விழா இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

செய்யாறு வட்டம் ஏனாதவாடி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செய்யாறு கல்வி மாவட்டம் ஜூனியர் ரெட்கிராஸ் சங்கத்தலைவர் ஜி.செல்வத்திருமால் தலைமைத் தாங்கினார். செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ் 1330 மரக்கன்றுகளை நட்டு வைத்தார். செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எஸ்.சுகாதானந்கம் தோட்டத்தில் வளர்க்கக் கூடிய செடிகளை கிராம மக்களுக்கு வழங்கினார். தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் கிராம மக்களுக்கு கபசுரகுடிநீரும், ஆர்சனிக் மாத்திரைகள் வழங்கப்பட்டன.  மேலும், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சாலை போக்குவரத்து விதிகள் குறித்தும், மதி ஒழிப்பு விழிப்பணர்வு குறித்த விளம்பர நீண்ட சுவரொட்டி அமைக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் பள்ளி துணை ஆய்வாளர் ஸ்ரீபதி, ஊராட்சி மன்ற தலைவர் எல்லப்பன், கிராம இளைஞர இயக்க நிர்வாகிகள் வினாயகம், சந்தோஷ், சுரேஷ், தொண்டு நிறுவன நிர்வாகிகள் சுந்தர், வீரமணி, மொய்தீன், வட்டாரத் தலைவர் பொற்பாதம், வடிவேலு, சண்முகம், சிவானாந்தம், பி.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

புகைப்பட விளக்கம்: ஏனாதவாடி கிராமத்தில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com