திருவள்ளூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு சிலம்ப கழகத்துடன் இணைந்து செயல்படும் திருவள்ளூர் மாவட்ட சிலம்ப கழகம் சார்பில் அலமாதியில் புதிய கிளை திறப்பு விழாவும், சிறப்பு சிலம்பம் பயிற்சி முகாமும் மாவட்ட செயலாளர் ஆர். முருககனி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் எம் ராஜா முன்னிலை வகித்தார்.
இதில் சிலம்ப கழக புதிய கிளை பலகையும் மாணவ-மாணவியர்களுக்கு சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பூஜா பிரியா, யோக பிரியா, துரை, பார்த்திபன், ரதிராஜா பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.