ஐரோப்பாவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டியது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.4 லட்சம்.
மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பா கண்டத்தில் சனிக்கிழமை மதியம் 1 மணி நிலவரப்படி, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் - 15,06,853. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,40,260. பாதிக்கப்பட்டவர்களில் 9.3 சதவிகிதத்தினர் உயிரிழக்கின்றனர்.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி உலகம் முழுவதும் 34,22,595 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி - 2,40,338 (7 சதவிகித உயிரிழப்பு).
பல நாடுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. மிகவும் மோசமான நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சோதனைகளைச் செய்கின்றனர்.