எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் ஆதரவை பெறப்போவது யார்?

தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 3 சட்டப்பேரவை தொகுதிகளில் தமிழர்களின் வாக்குகளை பெற காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு, பாஜக கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

News image

இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் ஆதரவை பெறப்போவது யார்?

Updated On :28 ஜனவரி 2024, 1:26 am IST

தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 3 சட்டப்பேரவை தொகுதிகளில் தமிழர்களின் வாக்குகளை பெற காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு, பாஜக கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தேனி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ளது கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம்.
இங்கு தேவிகுளம், உடும்பன்சோலை, பீர் மேடு ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

மூன்று தொகுதிகளிலும் உள்ள கிராம பஞ்சாயத்துகளில்  90 சதவிகிதம் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர்.

தேவிகுளம் சட்டப்பேரவைத் தொகுதி 

தேவிகுளம் சட்டப்பேரவைத் தொகுதி 65 சதவீதம் தமிழர்கள் வாழ்கின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் டி.குமார், சிபிஎம். சார்பில் - வக்கீல் ராஜா, அதிமுக சார்பில் எஸ்.கணேசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அடிமாலி, எடமாலக்குடி, காந்தலூர், மாங்குளம், மூணாறு, பள்ளிவாசல், வட்டவடா, வெள்ளத்தூவல், பைசன்வேலி, சின்னக்கானல் என்ற கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு தனி தொகுதியான தேவிகுளத்தில் சிபிஐ சார்பில் ராஜேந்திரன் இரண்டு முறை வெற்றி பெற்றார்.

இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிமுக சார்பில் பெண் வேட்பாளர் கடந்த 2016 ல் போட்டியிட்டு 3 ஆவது இடத்தை பிடித்தார், இந்த முரை மனுத்தாக்கல் செய்த அதில் தவறு இருந்ததால், கடைசி நேரத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட எஸ்.கணேசன் என்பவரை அதிமுக ஆதரவு வேட்பாளராக இந்த முறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் காங்கிரஸ், கம்யூ கட்சியிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

உடும்பன்சோலை  சட்டப்பேரவை தொகுதி 

உடும்பன்சோலை சட்டப்பேரவைத் தொகுதியில்,  22 சதவிகித தமிழர்கள் வசிக்கின்றனர். சிபிஎம் சார்பில் எம்.எம்.மணி (கேரள மாநில மின்சாரத்துறை அமைச்சர்), காங்கிரஸ் சார்பில் இ.எம்.அகஸ்தி, பாஜக சார்பில் ரம்யாரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் அமைச்சர் மணிக்கும் அகஸ்திக்கும்தான் கடும் போட்டி நிலவுகிறது.  இங்கு சிபிஎம் கட்சி 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும்  வெற்றி பெற்றுள்ளது. எனவே 2 கட்சிகளுக்குமிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இரட்டையாறு, கருணாபுரம், நெடுங்கண்டம், பாம்பாடும்பாறை, ராஜாகாடு, ராஜகுமாரி, சாநாதம்பாறை, சேனாபதி, உடும்பன்சோலை, வண்டன்மேடு ஆகிய கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

பீர்மேடு சட்டப்பேரவைத் தொகுதி

பீர்மேடு சட்டப்பேரவைத் தொகுதியில் 35 சதவிகிதம் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர்.  காங்கிரஸ் சார்பில் சிரியாக் தாமஸ், சிபிஐ சார்பில் வழூர் சோமன், பாஜக சார்பில் ஸ்ரீ நகரி ராஜன் போட்டியிடுகின்றனர். இங்கு ஏலப்பாறை, கோக்கையாறு, குமுளி, பீர்மேடு, பெருவந்தானம், உப்புத்துறை, வண்டிப்பெரியாறு, அய்யப்பந் கோயில், சக்குபள்ளம் ஆகி. கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

கடந்த 3 முறை  எம்.எல்.ஏ.வாக இருந்த சிபிஐ கட்சியைச் சேர்ந்த  பிஜிமோளுக்கு, கட்சி விதிப்படி  இந்த முறை வாய்ப்பு கொடுக்க வில்லை. பிஜிமோள் எம்.எல்.ஏ.வாக இருக்கும் போது முல்லைப்பெரியாறு அணை பலமில்லை என்று கூறி நடத்திய போராட்டம் எதிரொலியாக்ததான் தேனி மாவட்டத்தில் சுமார் 50 நாட்கள் முல்லைப்பெரியாறு தமிவக உரிமையை காக்க போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இங்கு கம்யூ, காங் கட்சிகளுக்கிடையேதான் போட்டி நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.