பர்கூரில் கருணாநிதி 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 
பர்கூரில் கருணாநிதி 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
பர்கூரில் கருணாநிதி 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
Updated on
1 min read



கிருஷ்ணகிரி:  பர்கூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட  அவரது உருவப்படத்திற்கு திமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

பர்கூர் திமுக ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான திமுகவினர், மக்கள் பங்கேற்றனர். பர்கூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் திமுகவினர் மற்றும் மக்கள் தங்களது வீடு மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com